sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

/

வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

3


ADDED : ஜன 08, 2025 12:39 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:39 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது, லட்சக்கணக்கானோர் பல மணிநேரம் பல கி.மீ., துாரம் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலின் குளக்கரையில் காரிய மண்டம் ஒன்று அமைந்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அங்கு முன்னோர்களுக்கு காரியம் செய்யப்படுகிறது.

அங்கு காரியம் செய்ய, 60 ரூபாய் மட்டுமே, கட்டணமாக மக்களிடம் வசூலிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின்போதே, அந்த இடத்தை அறநிலையத்துறை வசம் மாநகராட்சி ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அவர்கள், 5,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்தனர்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, உள்ளூர் ஆளுங்கட்சியினர் கைக்கு மாறியது. முன்பு அந்த கட்சியினர் வசூலித்தனர். தற்போது, ஆளுங்கட்சியினர் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுகிறது.

இது குறித்து எதிர்க்கட்சியினர் வடபழனி முழுதும் 'போஸ்டர்' அடித்து ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவிர்க்க வேண்டும்


இதுகுறித்து, ஆன்மிகநல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:

முன்னோர்களுக்கு ஓடும் நீர்நிலைகளின் கரையில் தான் காரியம் செய்ய வேண்டும். அல்லது வீடுகளில் செய்யலாம். புனிதமான கோவில் முகப்பில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடந்து செல்லும் பகுதியில் காரிய மண்டம் அமைத்ததே தவறு.

அங்கு காரியம் செய்து முன்னோர்களுக்கு வழங்கிய உணவு உருண்டைகள், பக்தர்களின் காலணியால் மிதிக்கப்படுகின்றன. இதனால், காரியம் செய்ததற்கான பலன் இம்மி அளவும் கிடைக்காது. அதனை மக்கள் உணர்ந்து, அங்கு காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், சென்னை மாநகராட்சியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, அனைத்து எரியூட்டு, தகன மையங்களிலும் இலவசமாக சேவையாற்றப்படுகிறது.

ஆனால், இறந்தவர்களுக்கு காரியம் செய்ய, இங்கு ஆளுங்கட்சியினருக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இது ஆளுங்கட்சிக்கு மேலும் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

புனிதமான கோவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் இருந்து காரிய மண்டபத்தை உடனடியாக அகற்றி, இப்பிரச்னைக்கு மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- -நமது நிருபர்- -






      Dinamalar
      Follow us