/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி
/
ஐ.டி., ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி
ADDED : நவ 05, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, அம்பத்துார் அடுத்த ஒரகடத்தைச் சேர்ந்தவர் கிரீஸ் ரோசாரியோ, 24; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில், சென்னை பரங்கிமலை சர்ச்சிற்கு சென்று, திருமுல்லைவாயில் நண்பரை பார்த்துவிட்டு, மீண்டும் அயப்பாக்கம் வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்தவர்கள், கத்தியை காட்டி மிரட்டி, ஐ - போன், மொபைல் போன், மணி பர்ஸ், கூலிங் கிளாஸ், ஹெல்மெட் மற்றும் அவரது டி.வி.எஸ் என்டார்க் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.