ADDED : பிப் 07, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி., நகர், :சென்னை, எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ பிரதான சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு கத்தியுடன் சுற்றித் திரிந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 22, மற்றும் ராஜேஷ், 35, என தெரிந்தது.
இதையடுத்து, நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

