sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஓபியம்' போதைப்பொருள் பதுக்கி விற்ற ஜெய்ப்பூர் வாலிபர் கைது

/

'ஓபியம்' போதைப்பொருள் பதுக்கி விற்ற ஜெய்ப்பூர் வாலிபர் கைது

'ஓபியம்' போதைப்பொருள் பதுக்கி விற்ற ஜெய்ப்பூர் வாலிபர் கைது

'ஓபியம்' போதைப்பொருள் பதுக்கி விற்ற ஜெய்ப்பூர் வாலிபர் கைது


ADDED : செப் 12, 2025 02:51 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூக்கடை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.70 கிலோ, 'ஓபியம்' போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த, ஜெய்ப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கைப்பையுடன் சுற்றித்திரிந்த, ஓட்டேரியைச் சேர்ந்த ராகேஷ் குர்ஜார், 29, என்பவரை, பூக்கடை மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவரது பையை பரிசோதித்தபோது, 'ஓபியம்' என்ற போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து, ராகேஷ் குர்ஜாரை போலீசார் கைது செய்தனர்.

அவர், தன் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஓபியம் போதைப் பொருளை கடத்தி வந்து, சென்னையில் விற்பது தெரியவந்தது.

இவர் மீது, ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது. அவரிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.70 கிலோ எடையுள்ள ஓபியம் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராகேஷ் குர்ஜார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us