sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

/

 சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

 சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

 சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : நவ 23, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கநல்லுார்: வ. 23-: சாலையில் தவற விட்ட, 2 சவரன் தங்கச் சங்கிலியை, காவல் துறை வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்த ஜே.சி.பி., ஆப்பரேட்டருக்கு பாராட்டு குவிகிறது.

பழவந்தாங்கல், பர்மா தமிழர் காலனி, மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தரணி, 51; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் இரவு, நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலையில் நடந்து சென்றார்.

அப்போது சாலையில், 2 சவரன் தங்கச்சங்கிலி கிடந்தது. அதை எடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த ஹாஜிமுகமது என்பவர், தன் மனைவியின் நகை தவறிவிட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், ஹாஜிமுகமது மனைவியை அழைத்து, நகை குறித்த அடையாளம் பெற்று, உறுதி செய்த பின், நகையை ஒப்படைத்தார். இதையடுத்து, தரணிக்கு ஹாஜிமுகமது குடும்பத்தினர், காவல் துறையினர் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us