
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர் எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த சிவகுமார், 50, என்பவர் வீட்டில், இம்மாதம் 22ல், ஒரு சவரன் நகை திருடுபோனது.
கடந்த ஏப்., மாதம் நடந்த சம்பவத்தில், நகை திருடிய கார்த்திக், 29, சுதாகர், 30, ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரவாயல் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த கமலேஷ், 25, என்பரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

