sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 மணி நேரம் மின் வெட்டு கானத்துார் மக்கள் மறியல்

/

10 மணி நேரம் மின் வெட்டு கானத்துார் மக்கள் மறியல்

10 மணி நேரம் மின் வெட்டு கானத்துார் மக்கள் மறியல்

10 மணி நேரம் மின் வெட்டு கானத்துார் மக்கள் மறியல்


ADDED : ஜூலை 17, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார், இ.சி.ஆர்., கானத்துாரில், 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இ.சி.ஆர்., கானத்துார் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஒன்றரை மாதமாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.

நேற்று முன்தினம், 10 மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இரவில் மின்வினியோகம் வராததால், ஆவேசமடைந்த பகுதி மக்கள், இ.சி.ஆரில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

கானத்துார் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேசி சமாதானம் செய்ய, மின் வாரிய அதிகாரிகளை அழைத்தனர். அவர்கள் வர காலதாமதம் ஏற்பட்டது.

அதனால், போலீசார், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய அதிகாரியிடம் பேசியதையடுத்து, நள்ளிரவு மின் வினியோகம் சீரானது. இதனால், இ.சி.ஆரில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கூறியதாவது:

பொழுதுபோக்கு மையங்கள், ரிசார்ட் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படுவதில்லை. சீரான மின்வினியோகம் வாரியம் வழங்குகிறது. மின் தடை ஏற்பட்டாலும் அங்கு உடனே சரி செய்யப்படுகிறது.

ஆனால், குடியிருப்பு பகுதிகளை கண்டுகொள்வதில்லை. எங்களுக்கும் சீரான மின் வினியோகம் வழங்க, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us