sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

/

கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

கேரளா குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது


ADDED : அக் 01, 2024 12:49 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அக். 1-

கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் கபீர், 24. இவர் மீது, திருச்சூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த மார்ச் மாதம், மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவரை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து அவரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நிஜாமுதீன் கபீர், நேற்று முன்தினம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு 'ஏர் ஏசியா' விமானத்தில் செல்ல இருந்தார்.

அவரின், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கணினி சர்வரில் பரிசோதித்தபோது, நிஜாமுதீன் கபீர், கேரள மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரின் பயணத்தை ரத்து செய்து, அவரை அழைத்து சென்று சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், அவரை கேரளா மாநில போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us