sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது

/

போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது

போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது

போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது


ADDED : மே 17, 2025 12:15 AM

Google News

ADDED : மே 17, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெரு - ரெட்டி தெரு சந்திப்பில், விருகம்பாக்கம் போக்குவரத்து எஸ்.ஐ., ரியாஸ் அகமது, வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த 'ஹூண்டாய் ஐ-20' காரை நிறுத்திய ரியாஸ் அகமது, ஓட்டுநர் மது அருந்தியுள்ளாரா இல்லையா என்பதை கண்டறியும் சோதனை மேற்கொண்டார்.

அதற்கு கார் ஓட்டுநர் கவியரசன், 40, தன் ஒரு மாமா சி.பி.ஐ.,யில் அதிகாரியாகவும், மற்றொரு மாமா அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., எனவும் கூறி, அவரை மிரட்டியுள்ளார்.

மது போதையில் அவர் அநாகரிகமாக பேசியதை, சட்டையில் உள்ள கேமரா வாயிலாக எஸ்.ஐ., பதிவு செய்தார். இதையறிந்த ஓட்டுநர், எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டதால் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது.

எஸ்.ஐ., ரியாஸ் அகமது புகாரின்படி, சட்டம் - ஒழுங்கு போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், கவியரசன், இசை கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி உள்ளிட்ட பலருக்கு 'கீ போர்டு' இசை வாசிப்பாளராக இருப்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us