/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு
/
கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு
கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு
கோவிலம்பாக்கம் - வடக்குபட்டு மோசமான சாலையால் தவிப்பு
ADDED : அக் 26, 2024 03:23 AM

கோவிலம்பாக்கம்:பரங்கிமலை - மேடவாக்கம் பிரதான சாலையில், மெட்ரோ ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, மேடவாக்கம் - ஆலந்துார் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் பெரும்பகுதி, போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தரமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவிலம்பாக்கம் - வடக்குப்பட்டு இடையே உள்ள சாலை, படுமோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மழை பெய்தால், சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலையின் இருபுறமும், ஆக்கிரமிப்புகளால் குறுகி காணப்படுகிறது.
சீரான போக்குவரத்திற்கேற்ப, வடக்குப்பட்டு - கோவிலம்பாக்கம் இடையே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்திற்கு ஏதுவாக தார்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.