/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறு மழைக்கே சகதியான கோயம்பேடு சந்தை வளாகம்
/
சிறு மழைக்கே சகதியான கோயம்பேடு சந்தை வளாகம்
ADDED : ஜூலை 22, 2025 12:34 AM

கோயம்பேடு, முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், கோயம்பேடு சந்தை வளாகம் சிறு மழைக்கே சகதியாக மாறியது.
கோயம்பேடு சந்தைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து, பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு சந்தை, சிறு மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் தொடர்கதையாக உள்ளது.
கடந்தாண்டு பெய்த மழையில், கோயம்பேடு சந்தையில் குளம் போல் மழைநீர் தேங்கவே, வடிகால்வாய்கள் துார்வாரப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சந்தை வளாகம் மீண்டும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.