/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.10 கோடி மோசடி ஆவடி நிலத்தரகர் கைது
/
ரூ.2.10 கோடி மோசடி ஆவடி நிலத்தரகர் கைது
ADDED : செப் 27, 2024 12:38 AM

ஆவடி, வேப்பேரி, ரித்தர்டன் சாலையைச் சேர்ந்தவர்ஷைலஜா, 64. பூந்தமல்லி, வரதராஜபுரம், கே.வி.ஆர் நகரில், இவரது பெயரில் இரு மனைகள் உள்ளன. இந்நிலையில், இவரது தந்தை ரோசி நாயுடுவின் கையெழுத்தை போலியாக போட்டு, 'பவர் பத்திரம்' தயார் செய்து, தனசேகர் என்பவர் மோசடி செய்தது தெரிந்தது. இதன் மதிப்பு 1.40 கோடி ரூபாய்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சம்பத், 61; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், தன் மகள் பெயரில் நிலம் வாங்க இடம் தேடினார்.
அப்போது தனசேகர், பூந்தமல்லி, வரதராஜபுரம், கே.வி.ஆர் நகரிலுள்ள, வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான, 1,980 சதுர அடி நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, 70.40 லட்சம் ரூபாய்க்கு, சம்பத்திடம் விற்று ஏமாற்றியுள்ளார்.
இதற்கு, கொளத்துாரைச் சேர்ந்த சரத்பாபு, கோயம்பேடில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் ஏமாற்றிய மொத்த நிலத்தின் மதிப்பு 2.10 கோடி.
இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப் பிரிவில் கடந்தாண்டு, ைஷலஜா மற்றும் சம்பத் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆவடி, கன்னிகாபுரம், கேம்ப் பகுதியைச் சேர்ந்த தனசேகர், 45, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.