ADDED : மார் 03, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிமுனை:ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் நுழைவாயில் முன், கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில், பள்ளி மாணவர்கள் உட்பட உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர் சங்கம் உட்பட ஐந்து சங்கங்கள் இணைந்து, பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், உயர்நீதிமன்றம் முன், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

