sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து

/

நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து

நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து

நேருக்குநேர் மோதிய விபத்தில் கவிழ்ந்த லாரி பிரதான சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து


ADDED : ஜூன் 26, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, அடையாறு, சர்தார்படேல் சாலையில் நேருக்குநேர் லாரிகள் மோதிய விபத்தில், கான்கிரீட் கலவையுடன் வந்த லாரி கவிழ்ந்ததில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்புரத்தில் இருந்து அடையாறு நோக்கி, நேற்று காலை 5:30 மணிக்கு, கான்கிரீட் கலவை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அதேநேரம், சைதாப்பேட்டையில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி கழிவுநீர் லாரி வந்தது.

அடையாறு, சர்தார்படேல் சாலை கேன்சர்மருத்துவமனை சிக்னலில், எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்குநேர் மோதி கொண்டன.

இதில், கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததில், கான்கிரீட் கலவை சாலையில் கொட்டியது. அதோடு, லாரியில் இருந்த டேங்கர் சேதமடைந்து, டீசலும் சாலையில் கொட்டியது.

அந்தவழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கினர்.

இதையடுத்து, கோட்டூர்புரம், கிண்டியில் இருந்து அடையாறு வழித்தடம் மற்றும் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு பகுதியில் இருந்து, கிண்டி, கோட்டூர்புரம் வழித்தடங்களிலும், ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் மற்றும் துாய்மை பணி செய்யும் 'உர்பேசர் சுமித்' ஊழியர்கள், 25 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட் கலவையுடன் டீசல் கலந்ததால், அப்படியே அள்ள முடியவில்லை. இதனால், சறுக்காத வகையில் மணல் சாலை சுத்தம் செய்யப்பட்டது. கவிழ்ந்த லாரி கிரேன் கொண்டு வந்து அகற்றப்பட்டது. இந்த பணிகள் காலை 8:30 மணி வரை நடந்தன.

இதனால், மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை மற்றும் அவசர பணியாக சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.அடையாறு போக்குவரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருத்தணியில் விதிமீறி சென்று கவிழ்ந்த லாரி

ஆந்திர மாநிலத்தில் இருந்து கிராவல் மண் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகள், தமிழக எல்லையான பள்ளிப்பட்டு, திருத்தணி வழியாக சென்னைக்கு வருகின்றன.நேற்று காலை 6:00 மணியளவில், பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள்கிராவல் மண் ஏற்றிக் கொண்டு நொச்சிலி வழியாக கே.ஜி.கண்டிகை நோக்கி வந்துக் கொண்டிருந்தன.இதில் ஒரு டிப்பர் லாரி, சிறுகுமி பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் லோசான காயத்துடன் உயிர் தப்பினார்.இதனால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கலெக்டர் உத்தரவை மீறி இரவு, பகல் மற்றும் பள்ளி வேளைகளிலும் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் செல்கின்றன. பள்ளிப்பட்டு - ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு - நகரி, பள்ளிப்பட்டு - பொதட்டூர்பேட்டை ஆகிய, மாநில நெடுஞ்சாலைகள் வழியாக, திருத்தணி நகர எல்லைக்கு வந்து, அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம். ஆனால், மாவட்ட நெடுஞ்சாலை, ஒருவழிச்சாலையில் விதிமீறி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன' என்றனர்.








      Dinamalar
      Follow us