sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது

/

லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது


ADDED : அக் 31, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரன் நகர்: சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததுடன், லாட்டரி வாங்கிய நபரை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

மேற்கு மாம்பலம், குமரன் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 42. இவர், மேற்கு மாம்பலம், கங்கையம்மன் கோவில் தெருவில், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்துவந்த, காளி, 33, அரவிந்த் ஆகியோரிடம், கடந்த 10 நாட்களாக, தினமும் 500 ரூபாய்க்கு லாட்டரி வாங்கியுள்ளார்.

பரிசு ஏதும் கிடைக்காததால், தான் லாட்டரி வாங்க அளித்த பணத்தை திருப்பி தரும்படி, காளி மற்றும் அரவிந்திடம் சரவணன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கத்தியை காட்டி மிரட்டினர்.

இதுகுறித்து, குமரன் நகர் காவல் நிலையத்தில், சரவணன் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளி, 33, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 8,000 ரூபாய், 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அரவிந்தை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us