sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

/

 மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

 மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

 மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்


ADDED : நவ 15, 2025 12:00 AM

Google News

ADDED : நவ 15, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு, நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

அதனால், திருச்சியில் இருந்து தானமாக பெறப்பட்ட நுரையீரலை, வடபழனிக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக நுரையீரல் எடுத்து வரப்பட்டது.

மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வடபழனிக்கு, சாலை மார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டியிருக்கும். எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்ல முடிவானது.

அதன்படி, மெட்ரோவில் பயணித்து 17:37 நிமிடங்களில் வடபழனிக்கு டாக்டர்கள் குழுவினர் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

அங்கிருந்து அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு, நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்பட்ட நுரையீரல், மெட்ரோ ரயில் வாயிலாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சமீபத்தில் எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us