sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'சகலை'யை அடித்து கொன்ற மதுராந்தகம் வாலிபர் கைது

/

'சகலை'யை அடித்து கொன்ற மதுராந்தகம் வாலிபர் கைது

'சகலை'யை அடித்து கொன்ற மதுராந்தகம் வாலிபர் கைது

'சகலை'யை அடித்து கொன்ற மதுராந்தகம் வாலிபர் கைது


ADDED : பிப் 10, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த தேரடி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 35; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி, 34. இரண்டு மகன்கள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன், வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி கடந்த 15 நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள தன் அக்கா புனிதா வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, புனிதாவின் வீட்டிற்கு சென்ற சரவணன், மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சண்டை போட்டுள்ளார்.

இதில், புனிதாவின் கணவர் வெங்கடேசன், 47, என்பவர், சரவணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து, சரவணனின் பின் தலையில் வெங்கடேசன் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விசாரித்த படாளம் போலீசார், வெங்கடேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us