தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்

 தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்

 தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்


ADDED : ஏப் 21, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைதாப்பேட்டை: அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன், சைதாப்பேட்டை தொகுதியில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2006, 2011ல் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது கொண்டு வந்த திட்டங்களை தான், இன்று வரை தொகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

மொத்தம் 3,600 பேருக்கு பட்டா வாங்கி கொடுத்தேன். அப்போது மக்கள் செழிப்பாக இருந்தனர். அடுத்த 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எதுவும் செய்யவில்லை.

அடையாறு ஆற்றை ஒட்டி, எந்த மேம்பாட்டு பணியும் செய்யவில்லை. இங்குள்ள மக்களை, துயரத்திற்கு ஆளாக்கி உள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அவரது தொகுதி மக்களுக்கான சுகாதாரத்தை கூட செய்து கொடுக்கவில்லை. குப்பை, கொசு, காய்ச்சலால் மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுகாதாரமான குடிநீரை கூட வழங்கவில்லை. மீண்டும் சுப்பிரமணியன் வெற்றி பெற்றால், தொகுதி மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும். தொகுதியை வளர்ச்சி பாதையில் எடுத்துச்செல்ல, குக்கர் சின்னத்தில் ஓட்டளித்து, மீண்டும் என்னை வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, அ.தி.மு.க.வில் மோகன், கதிர்முருகன், ஷேக் அலி, பா.ஜ.,வில் காளிதாஸ், பா.ம.க.,வில் திலகர், கோபி, புரட்சி பாரதம் கட்சியில் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us