/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
/
காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 15, 2025 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடி, பி.பி.சாலையைச் சேர்ந்தவர் ரபேல், 55; ஆட்டோ கேரேஜ் நடத்தி வருகிறார். இவர், தன் மெக்கானிக் ெஷட்டிற்கு வந்த மாருதி காரில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக, நேற்று மாலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வியாசர்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.