ADDED : ஜூன் 10, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு,அடையாறு, திரு.வி.க., பாலம் அருகில், மல்லிப்பூ நகர் பகுதியில் ஆற்றங்கரையில், 35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி கிடந்தது.
திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். அடையாறு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அங்க அடையாளங்கள் வைத்து, அந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.