/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லை கட்டி குளத்தில் வீசப்பட்ட ஆண் சடலம்
/
கல்லை கட்டி குளத்தில் வீசப்பட்ட ஆண் சடலம்
ADDED : டிச 21, 2024 12:23 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிச்சத்திரம் அருகே புதுப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொது குளத்தில், ஆண் சடலம் மிதப்பதாக, பாலுசெட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
பின், குளத்தில் மிதந்த சடலத்தை போலீசார் மீட்டனர். தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன், இடுப்பில் கல் ஒன்று கட்டப்பட்டு, தண்ணீரில் சடலம் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்த நபருக்கு, 35 வயது இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.