/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.14.70 கோடியில் மாம்பலம் ரயில் நிலையம் தயார்
/
ரூ.14.70 கோடியில் மாம்பலம் ரயில் நிலையம் தயார்
ADDED : பிப் 09, 2026 06:19 AM

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், மாம்பலம் ரயில் நிலையம் 14.70 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு, பயணியரின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மாம்பலம் ரயில் நிலையம் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இங்கு, ஐந்து நடைமேடை கள் உள்ளன. தினமும் 225க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சேவை உள்ளது. தவிர, சில விரைவு ரயி ல்களும் நின்று செல்கின்றன.
இந்நிலையில், 'அம்ரித் பாரத்' ரயில் திட்டத்தின் கீழ், 14.70 கோடி ரூபாயில், புதிதாக டிக்கெட் அலுவலகம், கூரைகள், மின்துாக்கி, நடைமேம்பாலம், பயணியர் டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்ட வசதிகளோடு, மாம்பலம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, விரைவில் திறக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

