/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
/
கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
கன்டெய்னர் லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் தாக்கியவர் கைது
ADDED : மார் 31, 2025 04:03 AM

காசிமேடு:சென்னை, ஆண்டாள் குப்பத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின், 40; கன்டெய்னர் லாரி ஓட்டுநர்.
இவர், சென்னை துறைமுகத்திற்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக, காசிமேடு மீன்பிடி துறைமுக சர்வீஸ் சாலையில் உள்ள கடல் முத்து மாரியம்மன் கோவில் அருகே, நேற்று லாரியில் சென்றார்.
அவரது வண்டியின் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர், தொடர்ந்து 'ஹாரன்' எழுப்பி கொண்டு வந்தார். உடனே ஸ்டாலின் லாரியை நிறுத்தி கீழே இறக்கிய போது, பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் 'தன் வண்டிக்கு வழி விடமாட்டாயா' எனக்கூறி, தகாத வார்த்தைகளால் பேசி, இரும்பு ராடால் ஸ்டாலின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.