sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது

/

தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது

தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது

தொழில் கடன் ரூ.2.30 கோடி மோசடி செய்தவர் கைது


ADDED : நவ 28, 2024 12:37 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இந்தியன் வங்கி, வடபழனி கிளை மேலாளர் ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'போலி ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, 2.30 கோடி ரூபாய் தொழில் கடன் பெற்ற ரமேஷ், வேலவன் தீபக், சரவணகுமார், பவளபாலன் ஆகியோர், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

'அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்' என, கூறியிருந்தார்.

இதுகுறித்து, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வங்கியை ஏமாற்றும் நோக்கில், 'வி டேக் பார்க்' என்ற நிறுவனத்தை பெயரளவில் போலியாக துவக்கி, போலி மதிப்பீட்டு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று, திருப்பி செலுத்தாதது உறுதியானது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட நீலாங்கரை ரங்கா ரெட்டி கார்டன், 2வது பிரதான சாலையைச் சேர்ந்த ரமேஷ், 57 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us