/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரெடிட் கார்டு மூலம் மோசடி ஆபீசை ஏமாற்றியவர் கைது
/
கிரெடிட் கார்டு மூலம் மோசடி ஆபீசை ஏமாற்றியவர் கைது
கிரெடிட் கார்டு மூலம் மோசடி ஆபீசை ஏமாற்றியவர் கைது
கிரெடிட் கார்டு மூலம் மோசடி ஆபீசை ஏமாற்றியவர் கைது
ADDED : செப் 14, 2025 03:07 AM
செம்மஞ்சேரி:பணிபுரிந்த நிறுவனம் வழங்கிய கிரெடிட் கார்டை, சொந்த செலவுக்கு பயன்படுத்தி, பணம் கையாடல் செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பர்ச்சேஸ் அனலிஸ்டாக பணிபுரிந்தவர் பாலாஜி, 38. இவருக்கு, நிறுவனம் சார்பில், கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.
அதை இவர், நிறுவனத்தின் தேவைக்கு பயன்படுத்துவதை தவிர்த்து, தன் சொந்த செலவுக்கு பயன்படுத்தி வந்தார். இதன் வாயிலாக, 20 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார்.
கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை, திருப்பி செலுத்த வேண்டும் என நிறுவனம் கூறியபோதும், அவர் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து, செம்மஞ்சேரி போலீசில் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பாலாஜி கைது செய்யப்பட்டார்.