sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1.10 கோடி மோசடி நபர் கைது

/

ரூ.1.10 கோடி மோசடி நபர் கைது

ரூ.1.10 கோடி மோசடி நபர் கைது

ரூ.1.10 கோடி மோசடி நபர் கைது


ADDED : நவ 07, 2024 12:35 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,போரூர், கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 42. இவர், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

எனக்கு கொளப்பாக்கத்தைச் சேர்ந்த மேகநாதன், கொளப்பாக்கம் வார்டு உறுப்பினர் துரை சேபாலா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கொளப்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலம் விலைக்கு வருவதாகக் கூறினர்.

அதன் உரிமையாளர் ஹேமா சேஷன் எனக்கூறி, வழக்கறிஞர் பிரபாகரன் அவரை அறிமுகப்படுத்தினார். ஹேமா சேஷன், நிலத்தின் அசல் ஆவணம் தொலைந்ததால், மகள் சந்திரா பெயரில் நிலத்தின் பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தார். அதற்காக 1.10 கோடி ரூபாய் ஹேமாசேஷனிடம் கொடுத்தேன்.

அந்த நிலத்தில் பிரச்னை ஏற்பட, மோசடியால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் விசாரித்தனர். இதில், பொது அதிகாரம் வழங்கிய சந்திரா என்பவர் போலியான நபர் என்பதும், ஹேமா சேஷனுக்கு மகன் மட்டும் தான் உள்ளார் என்பதும் தெரிந்தது.

மேலும், வழக்கறிஞர் பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஜெயகுமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது.

இதில் பெரம்பூர், கவுதமபுரத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 52, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us