sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது

தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது

தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : ஜூலை 25, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர் :தொழில் துவங்க உரிமம் பெற்று தருவதாக, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகர், 48வது அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன், 53. இவருக்கு, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த காயப்பாக்கத்தில் விளை நிலம் உள்ளது.

கண்ணனுக்கு, 2017ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் அறிமுகமானார். 'நான் பால் பண்ணை நடத்தி வருகிறேன். உங்கள் இடத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் துவங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய கண்ணன், புதிதாக தொழில் துவங்க, அரசிடம் அனுமதி மற்றும் உரிமம் பெற, ராஜேஷ் கண்ணனிடம், 16 லட்சம் ரூபாய் அளித்தார். பணத்தை பெற்ற ராஜேஷ் கண்ணன், உரிமம் பெற்று தராமல் ஏமாற்றி வந்தார்.

அசோக் நகர் காவல் நிலையத்தில், கண்ணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, முகப்பேரை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், 48 என்பவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us