/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டை 'லீசு'க்கு விடுவதாக கூறி ரூ.15 லட்சம் அபகரித்தவர் கைது
/
வீட்டை 'லீசு'க்கு விடுவதாக கூறி ரூ.15 லட்சம் அபகரித்தவர் கைது
வீட்டை 'லீசு'க்கு விடுவதாக கூறி ரூ.15 லட்சம் அபகரித்தவர் கைது
வீட்டை 'லீசு'க்கு விடுவதாக கூறி ரூ.15 லட்சம் அபகரித்தவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 12:21 AM

அயனாவரம், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி, 15 லட்சம்ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர், 2024 டிசம்பரில்,அயனாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அயனா வரத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் அறிமுகமாகி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அயனாவரம் பூபதி நகரில் உள்ள தன் வீட்டை, 15 லட்சம் ரூபாய்க்கு, 'லீசு'க்கு விடுவதாக கூறியுள்ளார்.
வீட்டில் ஏற்கனவே, 'லீசு'க்கு குடியிருப்பவருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, மணிகண்டனிடம், 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி, ஒப்பந்தமும் போட்டுள்ளார்.
பின், வீட்டையும் காலி செய்து கொடுக்காமல், பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி உள்ளார்.
பின், சிறுக, சிறுக, 4.5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து, மீதி பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மணிகண்டன் அளித்த புகாரையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மேற்படி வீட்டை சிவகுமார் ஏற்கனவே, அடமானம் வைத்து பணம் பெற்று, அப்பணத்தில் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
அதே வீட்டை ஏற்கனவே, 'லீசு'க்கு விட்டிருந்த நிலையில், மீண்டும் ஆன்லைனில் விளம்பரம் செய்து மற்றொருவரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து, சிவகுமாரை, 56, போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.