sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மத்திய அரசு மாஜி அதிகாரியிடம் ரூ.88 லட்சம் சுருட்டியவர் கைது

/

மத்திய அரசு மாஜி அதிகாரியிடம் ரூ.88 லட்சம் சுருட்டியவர் கைது

மத்திய அரசு மாஜி அதிகாரியிடம் ரூ.88 லட்சம் சுருட்டியவர் கைது

மத்திய அரசு மாஜி அதிகாரியிடம் ரூ.88 லட்சம் சுருட்டியவர் கைது


ADDED : நவ 20, 2024 12:32 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த, மத்திய பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற அதிகாரிக்கு, செப்.,9ல், மர்ம நபர் ஒருவர், மும்பை போலீஸ் அதிகாரி என, வாட்ஸாப் அழைப்பு வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.

உங்கள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, பண மோசடி நடந்துள்ளது. நீங்கள், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள, காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, கூறியுள்ளார்.

பின், அந்த அழைப்பை, டிராய் என்ற இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரிக்கு இணைப்பதாக கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், வாட்ஸாப் வீடியோ அழைப்பில் வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தொடர்பு கொண்டதும், வங்கி கணக்கு, வீட்டு முகவரி, பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளார். மோசடி செய்யப்பட்ட பணம் உங்கள் வங்கி இருப்பில் இருந்து எடுக்கவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அதற்காக, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புங்கள். ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த பின், அந்த பணம் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என, கூறியுள்ளார். அவ்வாறு, 88 லட்சம் ரூபாய் அனுப்பச் சொல்லி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற மத்திய அரசின் பொதுப்பணித்துறை அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.

அப்போது, மோசடி செய்த பணத்தில், 3.83 லட்சம் ரூபாய், ஒரே நாளில், அசாம் மாநிலத்தில் இருந்து, பல மாநிலங்களைச் சேர்ந்த, 178 வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அசாம் மாநிலத்தில் முகாமிட்டு, அதே மாநிலத்தைச் சேர்ந்த பார்த்தா பிரதிம் போரா, 38, என்பவரை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us