sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வாரிய ஊழியர் போல நடித்து வீடு புகுந்து நகை திருடியவர் கைது

/

மின் வாரிய ஊழியர் போல நடித்து வீடு புகுந்து நகை திருடியவர் கைது

மின் வாரிய ஊழியர் போல நடித்து வீடு புகுந்து நகை திருடியவர் கைது

மின் வாரிய ஊழியர் போல நடித்து வீடு புகுந்து நகை திருடியவர் கைது


ADDED : ஜூன் 09, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் திரிபுரசுந்தரி, 69; ஓய்வு பெற்ற ஆசிரியை.

கடந்த 30ம் தேதி காலை இவரது வீட்டிற்கு வந்த நபர், தான் மின் வாரியத்தில் பணிபுரிவதாகவும், வீட்டில் குறைந்த மின்னழுத்த பிரச்னை இருப்பதாக புகார் வந்ததால், அதை சரிசெய்ய வந்திருப்பதாகவும் கூறி வீட்டிற்கு சென்றுள்ளார்.

திரிபுரசுந்தரியை, வீட்டின் மின் இணைப்பு பெட்டிக்கு அருகே நிற்குமாறு கூறி அனுப்பி வைத்த அந்த நபர், சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து, மின் இணைப்பு சரிசெய்து விட்டதாக கூறி, அங்கிருந்து சென்றுள்ளார்.

அவர் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றதை பார்த்த திரிபுரசுந்தரிக்கு சந்தேகம் எழவே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, எட்டு சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், தண்டையார்பேட்டை வ.உ.சி., நகரைச் சேர்ந்த பாலாஜி, 36, என தெரிந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், எட்டு சவரன் நகை மற்றும் இரண்டு பைக்கை மீட்டனர். நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாலாஜி மீது 15க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 62 வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us