sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

/

'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

'டாஸ்மாக்' ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : டிச 26, 2024 12:29 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம்,விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பணி செய்து வருபவர் ஜீவானந்தம், 40. இவர், நேற்று முன்தினம் மதியம் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர், ஜீவானந்தத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 1,000 ரூபாய் பறித்து சென்றார். இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த, கொளப்பாக்கத்தை சேர்ந்த 'துப்பாக்கி' கார்த்திக், 45, என்ற ரவுடியை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கார்த்திக் மீது, ஏற்கனவே 30 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து, ஒரு கத்தி மற்றும் 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us