sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

/

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : ஏப் 14, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வாலிபரிடம் பணம் பறித்தது தொடர்பாக, சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், 30. இவர், அம்பத்துாரில் உள்ள வெல்டிங் கடையில் வெல்டராக பணி செய்து வருகிறார்.

இவர், தன் ஊரில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்ற, சொந்த ஊர் செல்ல, 11ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார்.

நேர கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அருகே காத்திருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், பச்சையப்பனை மிரட்டி, கையால் தாக்கி, அவரிடம் இருந்த, 32,000 ரூபாய் பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரையடுத்து, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, பணம் பறித்த நெற்குன்றத்தை சேர்ந்த சங்கர நாராயணன், 21 மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 27,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us