sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது

/

வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது

வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது

வங்கி கடனில் இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது


ADDED : டிச 18, 2024 12:27 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், அரும்பாக்கம், சான்றோர்பாளையம் ராமசாமி தெருவை சேர்ந்த முருகன், 61. இவரது வீட்டின் முதல் தளத்தில், கடந்த 2021ம் ஆண்டு, காஞ்சனா, 44, என்பவர், 15 லட்சம் ரூபாய் அளித்து குத்தகைக்கு எடுத்து தங்கினார்.

இந்நிலையில், வீட்டை காலி செய்ய வேண்டும் என, தனியார் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

இதுகுறித்து காஞ்சனா விசாரித்த போது, முருகன் தனியார் வங்கியில் வீட்டை வைத்து கடன் பெற்று, 1.91 கோடி ரூபாய் நிலுவை தொகை இருந்தது தெரியவந்தது.

இதனால், முருகனிடம்அளித்த, 15 லட்சம் ரூபாயை காஞ்சனா திருப்பி கேட்டார். ஆனால், முருகன் பணத்தை அளிக்காமல் தலைமறைவானார்.

இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து, திருவேற்காட்டில் பதுங்கியிருந்த முருகனை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us