/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
/
டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
ADDED : ஜன 08, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர்: 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியரிடம், கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, தங்கவேல் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் இளவரசன், 28; சமையல் 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியர்.
இவர் நேற்று பேசின்பாலம், சி.பி.சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, இளவரசனின் மொபைல்போன், பணத்தை திருடி சென்றார்.
ஆர்.கே.நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி, 20, என்பவரை நேற்று கைது செய்தனர்.

