sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நண்பரின் ரூ.1.50 கோடி இடத்தை விற்றவர் கைது

/

 நண்பரின் ரூ.1.50 கோடி இடத்தை விற்றவர் கைது

 நண்பரின் ரூ.1.50 கோடி இடத்தை விற்றவர் கைது

 நண்பரின் ரூ.1.50 கோடி இடத்தை விற்றவர் கைது


ADDED : நவ 26, 2025 03:07 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: நண்பரின் 1.50 கோடி ரூபாய் இடத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர், 52. இவருக்கு வந்தவாசியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. தொழில் முறையில் பழக்கமான இம்மானுவேல் என்பவர், அந்த நிலத்தை கொடுத்தால், திருமழிசை, கிரேஸ் நகரில் தன் நண்பர் இன்பரசனின் இரண்டு மனைகளை, கிரையம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்தை இம்மானுவேலுக்கு 2015ல், சேகர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக, இன்பரசனின் நிலத்தை இம்மானுவேல், சேகருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே இன்பரசன் இறந்து விட்டார்.

இந்நிலையில், தன் கணவர் பெயரில் இருந்த நிலத்தை, அவரது நண்பர் இம்மானுவேல் மோசடி செய்து விற்றதாகவும், அந்த ஆவணங்களை ரத்து செய்யுமாறும், இன்பரசன் மனைவி, கிண்டி பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்; அதனர்படி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2024ல், சே கர் மேற்படி நிலத்தில் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, இம்மானுவேல் ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை விற்று மோசடி செய்தது தெரிந்தது. எனவே, தன்னுடைய நிலம் மற்றும் நிலம் வாங்க செலவு செய்த 1.50 கோடி ரூபாய் திரும்ப பெற்று தருமாறு, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த திருமழிசை சேர்ந்த இம்மானுவேல், 55 என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us