sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் தாலியை அறுத்த நபர் கைது

/

பெண் தாலியை அறுத்த நபர் கைது

பெண் தாலியை அறுத்த நபர் கைது

பெண் தாலியை அறுத்த நபர் கைது


ADDED : நவ 04, 2024 05:04 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், 16வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணி, 37; பூக்கடையில் உள்ள எண்ணெய் கடையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகில் வசிக்கும் முத்து என்பவர், தீபாவளியன்று பட்டாசு வெடித்துள்ளார். அப்போது கலைவாணி, சிறிது துாரம் தள்ளிச் சென்று பட்டாசு வெடிக்குமாறு கூற, முத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அப்போது, இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அப்போது ஆத்திரமடைந்த முத்து, கலைவாணியின் தாலிக்கொடியை அறுத்துள்ளார்.

இதில், தாலிக்கொடியில் இருந்த தங்க காசு உள்ளிட்டவை காணவில்லை எனவும், தன் கணவர் அணிந்திருந்த தங்க செயினை முத்து பறித்து வீசியதாகவும், கலைவாணி நேற்று புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, 16வது பிளாக்கை சேர்ந்த முத்து, 36, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us