/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்
/
நடத்துநரிடம் செயின் பறித்தவர் சிக்கினார்
ADDED : ஆக 09, 2025 12:24 AM
திருமங்கலம்,நடத்துநரிடம், கத்திமுனையில் 3 சவரன் செயின் பறித்த போலீசார் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம், திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்தவர் அருண், 40. இவர், அண்ணா நகர் மேற்கு, மாநகர பேருந்து பணிமனையில், கோயம்பேடு - சிறுசேரி செல்லும் தடம் எண்: 570 பேருந்தில், நடத்துநராக பணிபுரிகிறார்.
கடந்த 1ம் தேதி பணி முடிந்து, அதிகாலை 4:00 மணியளவில், மாநகர பேருந்தில் பாடி மேம்பாலம் அருகில் இறங்கி, சர்வீஸ் சாலை வழியாக நடந்து வந்தார்.
அப்போது, அருணை முகமூடி அணிந்து வந்த மூவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 3 சவரன் தங்க செயின் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.
திருமங்கலம் போலீசார் விசாரித்து, மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர், 21, என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.