ADDED : ஏப் 17, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்,சூளைமேடு, காந்தி சாலையைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45. கடந்த 12ம் தேதி, துரைப்பாக்கம், டோல்கேட் அருகில் நின்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ரங்கநாதனின் 30,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து தப்பினர்.
துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 22, என்பவர் மொபைல் போன் பறித்தது தெரிந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்து, மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.