/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி ஊழியரிடம் போன் பறித்தவர் கைது
/
வங்கி ஊழியரிடம் போன் பறித்தவர் கைது
ADDED : மே 08, 2025 12:32 AM

சென்னை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனிமொழி, 26. இவர், சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார்.
கடந்த 5ம் தேதி அதிகாலை, வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், முகவரி கேட்பது போல நடித்து, மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, வேப்பேரி போலீசார் விசாரித்தனர். இதில், பிராட்வே, டேவிட்சன் தெருவைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவர் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். கனிமொழியிடம் போன் பறிப்பில் ஈடுபடுவதற்கு முன், கோயம்பேடு பகுதியில், இரண்டு நபர்களிடம் மொபைல் போன் பறித்து வந்தது தெரியவந்தது.