/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது
/
முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது
ADDED : நவ 17, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அரசு மாநகரப் பேருந்தில் முதியவரிடம் ஐ-போன் திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம், வி.ஜி.எம்., தெருவை சேர்ந்தவர் பாலராஜ், 70. ஓய்வு பெற்ற மத்தியஅரசு ஊழியர்.
நேற்று முன்தினம் காலை, ஜெமினி நிறுத்தத்தில் இருந்து, வழித்தடம்: 29 சி பேருந்தில் ஏறினார்.
சவேரா ஹோட்டல் அருகே பேருந்து சென்றபோது, அவரது கைப்பையிலிருந்த, விலை உயர்ந்த ஐ - போன் மொபைல் போனை, மர்மநபர் திருடிக் கொண்டு தப்பினார். ராயப்பேட்டை காவல் நிலையத்தில், பாலராஜ் புகார் அளித்தார்.
விசாரணையில், மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த குப்பன், 39, என்பவர், மொபைல் போன் திருடியது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

