/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எச்.,சில் போன் திருடியவர் கைது
/
ஜி.எச்.,சில் போன் திருடியவர் கைது
ADDED : ஜன 11, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாட்ராக், 33. இவரது தந்தை சாமுவேல், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, ஷாட்ராக் உடனிருந்து கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஷாட்ராக் மருத்துவமனையின் வராண்டாவில் துாங்கி கொண்டிருந்தபோது, அவரது ஆப்பிள் ஐ - போனை மர்ம நபர் திருடி தப்பி ஓடினார். ஷாட்ராக் அவரை விரட்டி சென்று பிடித்து, மருத்துவமனை வளாக போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆல்பர்ட் விஜய், 35, என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததும், மொபைல் போன் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.