/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்க விசாவிற்கு போலி ஆவணம் சமர்ப்பித்தவர் கைது
/
அமெரிக்க விசாவிற்கு போலி ஆவணம் சமர்ப்பித்தவர் கைது
அமெரிக்க விசாவிற்கு போலி ஆவணம் சமர்ப்பித்தவர் கைது
அமெரிக்க விசாவிற்கு போலி ஆவணம் சமர்ப்பித்தவர் கைது
ADDED : அக் 29, 2025 12:54 AM
சென்னை: போலி ஆணவங்கள் சமர்ப்பித்து, அமெரிக்கா விசா பெற முயன்ற பஞ்சாப் மாநில வழக்கறிஞரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அமெரிக்க துாதரகத்தின் மண்டல பாதுகாப்பு அதிகாரியான இஸ்கோனர் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் குமார், 32 என்பவர், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, அமெரிக்கா விசா பெற முயன்றுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதில், டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தி வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த ஜித்தேந்தர் ஆகியோரிடம், 30,000 ரூபாய் கொடுத்து, குல்தீப் குமார் போலி அனுபவ சான்றிதழ், ஊதிய ரசீதுகள் உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளார். பின், போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா விசா பெற முயன்றபோது, துாதரக அதிகாரிகள் அவற்றை கண்டுபிடித்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல்போன், பாஸ்போர்ட், போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

