/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற நபர் கைது
/
கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற நபர் கைது
ADDED : மார் 24, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், கோடம்பாக்கம், ஸ்டேஷன் வியூ சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு, 30. கடந்த 22ம் தேதி, ரயில்வே பார்டர் சாலையில் இவர் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர், உள்ளே இருந்த பர்சை திருட முயன்றார்.
மணிகண்டபிரபு, தன் நண்பர் உதவியுடன் அந்த நபரை பிடித்து, கோடம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையைச் சேர்ந்த உசேன், 30, என தெரியவந்தது. இவர், மீது ஒரு கொலை வழக்கு உட்பட 15 குற்ற வழக்குகள் உள்ளன.