sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.17 லட்சம் நிலமோசடி மீஞ்சூர் நபர் கைது 

/

ரூ.17 லட்சம் நிலமோசடி மீஞ்சூர் நபர் கைது 

ரூ.17 லட்சம் நிலமோசடி மீஞ்சூர் நபர் கைது 

ரூ.17 லட்சம் நிலமோசடி மீஞ்சூர் நபர் கைது 


ADDED : ஜூன் 12, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் புவனேந்திரன், 49. இவர், கடந்த 2007ல், மோரை கிராமம், அய்யப்பா நகரில் 1,080 சதுர அடி நிலத்தை, கோவிந்தராஜ் என்பவரிடம் இருந்து பெற்று அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர், புவனேந்திரன் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டனர்.

புவனேந்திரன், அவர்கள் குறித்து விசாரித்தபோது, சுனிலின் தாத்தா பெயரும், புவனேந்திரன் வாங்கிய நிலத்தின் முந்தைய உரிமையாளர் பெயரும் முனுசாமி நாயுடு என தெரிந்தது.

இந்த தகவலை தெரிந்து கொண்ட தீனதயாளன், முனுசாமி நாயுடு பெயரில் போலியான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று, தன் மகன் சுனில் என்பவருக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்தது தெரிய வந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 17 லட்சம் ரூபாய்.

இது குறித்து புவனேந்திரன், கடந்தாண்டு அக்., 10ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மீஞ்சூர், பெரிய சீமாவரம் பகுதியைச் சேர்ந்த சுனில், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us