/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6.5 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
/
6.5 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
ADDED : மார் 16, 2025 12:10 AM

திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, இணை கமிஷனர் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், ரயில்வே தண்டவாளத்தை கடந்து வந்த வாலிபரை, போலீசார் அழைத்து விசாரிக்க முற்பட்டனர்.
போலீசை பார்த்ததும், வாலிபர் கையில் வைத்திருந்த பார்சலை, தண்டவாளத்தில் போட்டு விட்டு தப்பியோடினார். சந்தேகமடைந்த போலீசார், வாலிபரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
அதில், திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன், 22, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இங்கு சில்லறை விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரிடமிருந்து, 6.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது, கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.