/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பதுக்கியவர் சிக்கினார்
/
வெளிநாட்டு மதுபாட்டில்கள் பதுக்கியவர் சிக்கினார்
ADDED : ஏப் 30, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று காலை, எம்.கே.பி.நகர், சர்மா நகர் 9வது தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் ஆட்டோவில் சாக்கு மூட்டை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அவரை மடக்கி, சோதனை செய்ததில் 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி, 45, என்பது தெரியவந்தது.
மேலும் சுற்று வட்டாரப்பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.