sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்

/

பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்

பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்

பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்


ADDED : ஜூலை 31, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை,கட்டுமான பணித்தளத்தில் துாங்கி கொண்டிருந்தவர்களின், 8 மொபைல் போன்களை திருடிய நபரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

இ.சி.ஆர்., அக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், 28ம் தேதி இரவு, பணித்தளத்திலேயே துாங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, 8 பேரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, பாரதிதாசன், 28, உள்ளிட்டோர், நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த செங்கோட்டையன், 29, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், 8 மொபைல் போன்கள் மற்றும் ஒரு பைக்கை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us