sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்சில் ஏற்றி விடுவதாக மதுரை நபரிடம் வழிப்பறி

/

பஸ்சில் ஏற்றி விடுவதாக மதுரை நபரிடம் வழிப்பறி

பஸ்சில் ஏற்றி விடுவதாக மதுரை நபரிடம் வழிப்பறி

பஸ்சில் ஏற்றி விடுவதாக மதுரை நபரிடம் வழிப்பறி


ADDED : ஜூன் 15, 2025 08:29 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மதுரை மாவட்டம், அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் சுபதினேஷ், 38. இவர், சில தினங்களுக்கு முன் வேலை நிமித்தமாக, சென்னை வானகரம் வந்துள்ளார்.

சொந்த ஊருக்குச் செல்ல, நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள, மதுபான கடை ஒன்றுக்கு சென்றும் திரும்பி உள்ளார்.

அப்போது இவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நைசாக பேச்சு கொடுத்தனர். அவர்கள், சுபதினேஷை, மதுரைக்கு செல்ல பேருந்து ஏற்றி விடுவதாக, இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி 1,700 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி உள்ளனர். இது குறித்து, கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us