sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு சிறை


ADDED : நவ 12, 2025 12:46 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் சாலையோரம் துாங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு, 2023ல், சாகுல் அமீது என்ற காசிம் என்பவர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் தாய் சிந்தாதிரிப் பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இதன்படி, போலீசார் விசாரணை நடத்தி, சாகுல் அமீது மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சாகுல் அமீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 75,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us