sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'

/

திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'

திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'

திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்தவருக்கு '10 ஆண்டு'


ADDED : மார் 19, 2025 12:31 AM

Google News

ADDED : மார் 19, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 32. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயபால், மருத்துவ சிகிச்சைக்காக 2019ல், சென்னை புளியந்தோபுக்கு வந்துள்ளார். மனைவியின் தோழி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

அப்போது, தோழியின் மூத்த மகளான 14 வயது சிறுமியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயபால் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us